News April 29, 2024

அந்தியூர் : வெறிச்சோடிய சாலை

image

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக வெயில் கடந்த வாரத்தில் 109.4 டிகிரி கொளுத்தியது. இதனால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களில் சென்று வரும் வாகன ஓட்டிகளின் நிலைமை பரிதாபமாக மாறியுள்ளது. இந்நிலையில், அம்மாபேட்டையில் இருந்து ஊமாரெட்டியூர் வழியாக குருவரெட்டியூர் செல்லும் சாலை இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

Similar News

News January 28, 2026

அந்தியூர் அருகே சோகம்: ஏழு மாடுகள் பலி!

image

அந்தியூர் அருகே காந்திநகரைச் சேர்ந்த விவசாயி வெங்கடசாமிக்குச் சொந்தமான ஏழு மாடுகள், செடிகளுக்குப் பாய்ச்ச வைத்திருந்த யூரியா கலந்த தண்ணீரைக் குடித்ததால் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தன. உயிரிழந்த மாடுகளின் மதிப்பு சுமார் 5 லட்சம் ரூபாய் எனத் தெரிகிறது. கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து வரும் நிலையில், வாழ்வாதாரத்தை இழந்த விவசாயக் குடும்பம் மிகுந்த சோகத்தில் உள்ளது.

News January 28, 2026

வெள்ளித்திருப்பூர் அருகே வாலிபர் விபரீத முடிவு

image

ஈரோடு மாவட்டம் வெள்ளித்திருப்பூர் அருகே மாத்தூரைச் சேர்ந்த பழனிச்சாமி (32), தனியார் ஆலையில் இயந்திர ஆப்பரேட்டராகப் பணிபுரிந்து வந்தார். ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்பட்ட கடுமையான வயிற்று வலி காரணமாக மனமுடைந்த அவர், நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 28, 2026

ஈரோடு: EC, பட்டா, சிட்டா.. இனி WhatsApp-ல்

image

தமிழக அரசு சொத்து தொடர்பான சேவையை WhatsApp-ல் வழங்க திட்டமிட்டுள்ளது.
1) 8188869996 எண்ணை Save பண்ணுங்க.
2) WhatsApp-ல் வணக்கம் அனுப்புங்க
3) மாவட்டம், கிராமம் விவரங்களை குறிப்பிட்டு (சொத்து நகல், ஈசி, பட்டா, சிட்டா) தேர்தெடுஙக.
4) நீங்கள் குறிப்பிட்ட சொத்து தொடர்பான அனைத்து தகவல்களும் WhatsApp-ல் கிடைக்கும்.
இந்த எண் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. மற்றவர்கள் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க

error: Content is protected !!