News December 17, 2025
பேசாமல் இருப்பது என்ன அரசியல்?.. விஜய் மீது சாடல்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விஜய் மீது அண்ணாமலை அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இந்த விவகாரம் குறித்து விஜய் பேசாமல் இருப்பது என்ன மாதிரியான அரசியல் என்றும், இவ்வளவு பிரச்னை நடந்தும் இப்படி அமைதியாக இருந்தால் மக்கள் எப்படி அவருக்கு ஓட்டு போடுவார்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பேச வேண்டிய இடத்தில் பேச வேண்டும் எனவும் அண்ணாமலை அறிவுரை வழங்கியுள்ளார்.
Similar News
News December 27, 2025
BREAKING: திமுக அரசுக்கு அடுத்த நெருக்கடி!

<<18674972>>இடைநிலை ஆசிரியர்கள்<<>>, தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதுவொருபுறம் இருக்க, திமுக கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கழகத்தின் நிறுவனர் எர்ணாவூர் நாராயணன் வரும் தேர்தலில் தான் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடுவதாக தன்னிச்சையாக அறிவித்து கூட்டணியில் புதிய பிரச்னையை கிளப்பியுள்ளார். இதனால், கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
News December 27, 2025
அமெரிக்காவின் 20 நிறுவனங்களுக்கு சீனா தடை

தைவானுக்கு ஆயுதங்கள் விற்க ஒப்பந்தம் போட்டதால், USA-வின் 20 பாதுகாப்பு நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்துள்ளது. அண்டை நாடான தைவானை, சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இவ்விவகாரத்தில் USA, தைவானின் பக்கம் நிற்பதால், USA – சீனா இடையே பிரச்னை நிலவுகிறது. இந்நிலையில், சீனாவின் எதிர்ப்பை மீறி ₹99,822 கோடியில் தைவானுக்கு ஆயுதங்கள் விற்க டிரம்ப், பச்சைக்கொடி காட்டியது பஞ்சாயத்தை மேலும் பெரிதாக்கியுள்ளது.
News December 27, 2025
3 குழந்தைகளை பெறுவது சிறந்தது: சந்திரபாபு நாயுடு

உலகளவில் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு ஒரு பெரிய தொழிலாளர் சக்தி வேண்டும் என ஆந்திர CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் முக்கியம் என்று கூறிய அவர், RSS தலைவர் மோகன் பகவத் கூறுவதுபோல ஒவ்வொரு தம்பதியும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால் 2047-க்கு பிறகும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்றும் கூறினார்.


