News December 16, 2025
குலசேகரம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திற்பரப்பு தேனீ வளர்ப்பு தொழிலாளி தீபுவின் மகன் அபிஷேக் (17)
பைக் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாடியிலுள்ள தனது அறையில் தூங்கச் சென்றுள்ளார். இன்று காலையில் தாயார் கவிதா டீ கொடுக்க அவரது அறைக்கு சென்ற போது அபிஷேக் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
Similar News
News December 27, 2025
குமரி: கூட்டுறவு வங்கியில் ரூ.96,210 சம்பளத்தில் வேலை..!

குமரி மக்களே, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள 50 உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. 18 – 32 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி, B.E/B.Tech முடித்தவர்கள் டிச.31க்குள் தகுதியுடைய நபர்கள் இங்கு <
News December 27, 2025
பொது விநியோகத் திட்ட குழுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

அரசின் பொது விநியோகத் திட்ட கண்காணிப்பு குழுவின் பதவிக்காலம் கடந்த அக்., மாதம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய குழுவில் சேர்வதற்கு பெண்கள், நுகர்வோர், பெருமைமிக்க நபர்கள் (ம) ஆதரவற்றோர் விண்ணப்பிக்கலாம். இதில் 5 பேர் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளோர் டிச.31ஆம் தேதிக்குள் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
News December 27, 2025
குமரி: கடல் அலையில் தூக்கி வீசப்பட்டு இளைஞர் பலி!

குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் ரெஜின் ஜாஸ்பின் (34). உறவினர்களுடன் நேற்று முன் தினம் குளச்சல் வந்தார். குளச்சலில் இருந்து 9 பேர் சேர்ந்து படகில் பயணம் செய்தனர். மிடாலம் பகுதியில் படகு கரை இறங்கும் போது பெரிய அலை படகில் மோதியது. இதில் படகில் இருந்த ரெஜின் தூக்கி வீசப்பட்டு கடலில் விழுந்தார். மருத்துவமனை கொண்டு சென்ற பொழுது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறினர். குளச்சல் போலீசார் விசாரணை.


