News December 16, 2025

EPS-க்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை: TN அரசு

image

11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாகவும், இதுதொடர்பாக EPS மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க CBI-க்கு உத்தரவிட கோரியும் ராஜசேகர் என்பவர் சென்னை HC-ல் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், EPS-க்கு எதிரான இப்புகாரில் முகாந்திரம் இல்லை, இப்புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும் TN அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனையடுத்து, இவ்வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Similar News

News April 11, 2026

‘கனிமொழி தனி கட்சி’.. அரசியல் பரபரப்பு

image

2026 தேர்தலில் திமுக தோற்றால் கனிமொழி தனி கட்சி தொடங்குவார் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஒருபுறம் ஸ்டாலினும், மற்றொருபுறம் கனிமொழியும் அரசியல் களத்தில் நேரடியாக மோதினால், திமுக யாரிடம் செல்லும் என்றே தெரியாது எனக் கூறினார். முன்னதாக, மாநில அரசியலில் தடம் பதிக்க கனிமொழி விருப்பம் தெரிவித்து தேர்தலில் சீட் கேட்டதாகவும், அதற்கு ஸ்டாலின் மறுப்பு தெரிவித்ததாகவும் பேச்சு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

News April 11, 2026

வைபவ் சூர்யவன்ஷியை புகழ்ந்து தள்ளிய RCB வீரர்

image

அனுபவமிக்க பிளேயர்களுககே பயத்தை காட்டும் அளவுக்கு RR-ன் 15 வயது வீரர் சூர்யவன்ஷி விளையாடுகிறார். இந்நிலையில் அவரை பாராட்டிய RCB வீரர் புவனேஷ்வர் குமார், சூர்யவன்ஷி பந்துகளை கண்மூடித் தனமாக அடிக்கவில்லை; நேர்த்தியான ஷாட்களையே விளையாடுகிறார் என்றார். மேலும், 15 வயது சிறுவனாக இருந்தாலும் சூர்யவன்ஷி மிகவும் பக்குவப்பட்டவராக இருப்பதாகவும், பாராட்டுகளுக்கு அவர் தகுதியுடையவர் என்றும் கூறியுள்ளார்.

News April 11, 2026

மாதம் ₹20,500 கொடுக்கும் அசத்தல் திட்டம்!

image

போஸ்ட் ஆபீஸின் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) மாதம் ₹20,500 வரை பெற வழி செய்கிறது. இத்திட்டத்தில் மொத்தமாக ₹30 லட்சத்தை முதலீடு செய்தால், 5 ஆண்டுகள் கழித்து 8.2% வட்டியுடன் ஆண்டுக்கு ₹2,46,000 வட்டி வருமானம். 12-ஆக வகுத்தால், மாதம் ₹20,500 வரை ஓய்வூதியமாக பெறலாம். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் சேரமுடியும். அருகில் இருக்கும் போஸ்ட் ஆபீஸை அணுகுங்கள். SHARE.

error: Content is protected !!