News December 16, 2025
கரூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்ட காவல்துறை சார்பில் முதியோர் நலனுக்காக உதவி எண்” (14567)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எண் முதியோர் மற்றும் அவர்களின் நலவாழ்வுக்கான தகவல், வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் தலையீட்டு சேவைகளை ஒரே தளத்தில் வழங்கும். மூதியோரின் பாதுகாப்பும் நலனும் கருதி, எந்த நேரத்திலும் இந்த எண்ணை அழைத்து உதவியை பெறலாம்.
Similar News
News December 25, 2025
கரூர்: தோகைமலை அருகே கோர விபத்து!

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே, சுரேஷ் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில் சேகர் ஓட்டி வந்த அசோக் லைலாண்ட் லாரி சுரேஷின் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையாடுறகு இறந்தவரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் தோகைமலை போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.
News December 25, 2025
கரூர் அருகே விஷம் குடித்து தற்கொலை!

கரூர் மாவட்டம், சிந்தலவாடி அருகே திம்மாச்சிபுரம் பகுதியில் தங்கையான் (70) என்ற முதியவர், தொடர்ச்சியான வயிற்றுவலி காரணமாக மனவிரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி நேற்று உயிரிழந்தார். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுவதும் சோகமேம்பாடு ஏற்பட்டுள்ளது. லாலாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 25, 2025
கரூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் தலைமையில், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் எதிர்வரும் 26.12.2025 ஆம் தேதியன்று மாலை 4.00 மணியளவில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே எரிவாயு நுகர்வோர்கள் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் குறைகள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தங்கவேல் தெரிவிக்கிறார்.


