News December 16, 2025
தூத்துக்குடியில் தேர்வு தேதி மாற்றம்.. கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடியில் மின்கம்பியாள் உதவியாளர் (Wireman Helper) தகுதிகாண் தேர்வு டிச.13, 14இல் நடைபெற இருந்தது. அது தற்போது 27.12.2025 மற்றும் 28.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. மேலும், விண்ணப்பத்தாரர்கள் தாங்கள் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் தேர்வு தொடர்பான விவரங்கள் மற்றும் தேர்வு நுழைவுச்சீட்டினை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 20, 2025
தூத்துக்குடி: SIR-ல் உங்கள் பெயர் இருக்கா? CHECK பண்ணுங்க

தூத்துக்குடி வாக்காளர்களே, SIR பணிகள் நிறைவுற்று நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது. நமது மாவட்டத்தில் 1,62,527 வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்க்க <
News December 20, 2025
தூத்துக்குடி: பட்டப்பகல் படுகொலை.. 2 பேர் அதிரடி கைது

சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுடலைமுத்து (30). கூலித் தொழிலாளியான இவரை சாத்தான்குளம் மதுபான பார் தொழிலாளர்கள் சுந்தர், ஜெகதீஷ் ஆகியோர் முன்விரோதம் காரணமாக நேற்று பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடினர். இந்நிலையில், சாத்தான்குளம் பகுதியில் பதுங்கி இருந்த இருவரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.
News December 20, 2025
தூத்துக்குடியில் தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு…

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு மொத்தம் 5,146 பேர் நாளை (டிச.21) தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் காலை 8 – 9.30 மணி, பிற்பகல் 2 – 3 மணிக்கு உள்ளாக மட்டுமே அனுமதிக்கப்படுவர். கருப்பு பேனா, ஹால் டிக்கெட், ஏதேனும் அரசு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். செல்போன் போன்ற எலக்ட்ரிக் சாதனத்திற்க்கு அனுமதியில்லை போன்ற கட்டுப்பாடுகளை காவல்துறை வெளியிட்டுள்ளது.


