News April 29, 2024
மருத்துவத் தேவைகளைத் தயாராக வைத்திருங்கள்

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரிப்பதால், சுகாதாரத்துறை களப் பணியாளர்கள் நாள்தோறும் பகல் 11 மணிக்குள் தடுப்பூசி போடும் பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், அதிக வெயிலில் மருந்துப் பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டாம், ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ORS கரைசலை வைத்திருக்க வேண்டும், 108 ஆம்புலன்ஸ்களில் ஐஸ் பேக்குகள் வைத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
Similar News
News August 27, 2025
அரசியலுக்கு வந்த ஒரே ஆண்டில் பிரதமர் பதவி!

ஐரோப்பிய நாடான லிதுவேனியாவின் புதிய பிரதமராக இங்கா ருகினீனே(44) தேர்வாகியுள்ளது அரசியலில் விநோதமாக பார்க்கப்படுகிறது. கடந்தாண்டு பொதுத்தேர்தலுக்கு முன்புதான் அவர், சமூக ஜனநாயக கட்சியில் சேர்ந்தார். பின்னர், MP-யாகி 2024 டிசம்பர் முதல் அந்நாட்டின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவருக்கு பிரதமர் பதவி தேடி வந்துள்ளது. இவர், அந்நாட்டின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
News August 27, 2025
பகல் 12 வரை இன்று.. முக்கிய செய்திகள்!

✪அரசியல்வாதி போல் <<17530864>>விஜய் <<>>நடக்க வேண்டும்: தமிழிசை
✪IPL-ல் இருந்து ஓய்வு அறிவித்தார் <<17531275>>அஸ்வின்<<>>
✪டிரம்ப்பின் 50% வரி <<17530648>>அமலானது<<>>.. ஸ்தம்பித்த துறைகள்
✪தங்கத்தின் <<17530907>>விலை <<>>சவரனுக்கு ₹280 உயர்ந்தது
✪கடத்தல் <<17531464>>வழக்கு<<>>.. நடிகை லட்சுமி மேனன் தப்பியோட்டம்
News August 27, 2025
BREAKING: விஜய் மீது பதிவானது முதல் கிரிமினல் வழக்கு

மதுரை மாநாட்டில் <<17484937>>தொண்டரை பவுன்சர் தூக்கி வீசிய<<>> சம்பவத்தில் விஜய் மீது முதல் கிரிமினல் வழக்கு பதிவாகியுள்ளது. தவெகவின் சரத்குமார், பெரம்பலூர் SP ஆபிஸில் கொடுத்த புகாரின் பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். FIR 346/2025-ல் கொலை மிரட்டல், கூட்டு தாக்குதல் உள்ளிட்ட 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவ்வழக்கில் முதல் குற்றவாளியாக விஜய், மேலும், பவுன்சர்கள் 10 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.