News December 16, 2025

விருதுநகர்: 18 வயதிலே இருவர் மீது பாய்ந்த குண்டாஸ்

image

ராஜபாளையம் மாப்பிள்ளை சுப்பையா தெருவை சேர்ந்த கருப்பையா மகன் மாரிச்செல்வம் 18, மங்காபுரம் சதுரகிரி மகன் காளிராஜ் 18, கடந்த மாதம் சந்திரபிரபு என்பவரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டது சம்பந்தமாக போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவர்கள் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கலெக்டர் சுகபுத்ரா இருவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Similar News

News January 1, 2026

விருதுநகரில் இனி 1000 பேருக்கு IT வேலை

image

ஐடி வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில், நெல்லை, குமரி, விருதுநகர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதற்காக தற்போது தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பூங்காவிலும் குறைந்தது 500 – 1,000 பேர் வரை தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. SHARE IT

News January 1, 2026

விருதுநகர்: 10th தகுதி.. ரூ.37,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

image

விருதுநகர் மக்களே, தனியார் வங்கியான பெடரல் வங்கியில் அலுவலக உதவியாளர் பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 10ஆம் வகுப்பு படித்தவர்கள் <>இங்கு கிளிக்<<>> செய்து ஜன.8க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.37,815 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள வேலைவாய்ப்பு தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.

News January 1, 2026

விருதுநகர் வாலிபருக்கு புத்தாண்டு நிகழ்வில் கத்தி குத்து

image

விருதுநகர் திருச்சுழியை சேர்ந்த ஆனந்தராஜ்(29) கொட்டாம்பட்டி யூனியன் அலுவலக புதிய கட்டிடத்தில் கொத்தனாராக வேலை பார்த்து வந்தார். நேற்று புத்தாண்டு கொண்டாடத் திற்காக கொட்டாம்பட்டி டாஸ்மாக் கடைக்கு சென்றவர், நள்ளிரவு கத்தி காயங்களுடன் இறந்து கிடந்தார். கொட்டாம்பட்டி விஏஓ மூர்த்தி கொடுத்த தகவலின் பேரில் கொட்டாம்பட்டி போலீசார் கொலையாளிகள் குறித்து இன்று விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!