News December 16, 2025

குமாரபாளையத்தில் வசமாக சிக்கிய நபர்: அதிரடி கைது!

image

குமாரபாளையம்: வட்டமலை பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் இளங்கோ (46). இவர் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு மதுபாட்டில்களில் அதிக போதை கொடுக்கும் திரவம் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 40 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Similar News

News December 28, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

image

நாமக்கலில் இருந்து நாளை ( டிசம்பர்.29 ) திங்கள் அதிகாலை 4:20am மணிக்கு 07356 ராமேஸ்வரம் – ஹூப்ளி ரயிலில் ஓசூர், பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி ஆகிய பகுதிகளுக்கு செல்லவும், காலை 8:30 மணிக்கு 20671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் டிக்கெட்டுகள் உள்ளன. தேவைப்படுவோர் விரைவாக முன்பதிவு செய்து பயனடையலாம்.

News December 28, 2025

நாமக்கல்: பதிவு செய்தால் ரூ.5 லட்சம் கிடைக்கும்!

image

CMன் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். இதை SHARE பண்ணுங்க!

News December 28, 2025

நாமக்கல் அருகே தீ விபத்து: இளைஞர் பலி!

image

நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள எரையம்பட்டி, பொம்மம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரம்மாள். இவர் வீட்டில் கடந்த 23-ஆம் தேதி விறகு அடுப்பில் சமையல் செய்தபோது அருகில் அமர்ந்து இருந்த பேரன் சிவலிங்கத்தின்(23) ஆடை தீப்பற்றி எரிந்ததில் அவர் பலத்த தீக்காயமடைந்து வெள்ளிக்கிழமை இரவு இறந்தார். இதுகுறித்து புகாரின்பேரில் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!