News December 16, 2025
பாம்பன் பாலத்தில் காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து

இராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சாலை பாலத்தில் இன்று (டிச.15) இரவு 8:15 மணியளவில் காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மருத்துவமனைக்கு அனுப்பி ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.
Similar News
News December 21, 2025
ராம்நாடு: 2 நாட்களுக்கு பின் கரை ஒதுங்கிய சடலம்

ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியை சேர்ந்த கணேசன் என்ற மீனவர் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு சரி செய்ய கடலுக்குள் இறங்கிய போது மாயமானார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு இன்று அவரது உடல் இறந்த நிலையில் கரையூர் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கி உள்ளது. தகவல் அறிந்த மரைன் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
News December 21, 2025
ராமநாதபுரம்: டிகிரி முடித்தால் SBI வங்கியில் வேலை.!

ராமநாதபுரம் மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 21, 2025
ராமநாதபுரம்: டூவிலர் கார் மோதி ஒருவர் பலி

இராமநாதபுரம் – தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சம்பை பேருந்து நிறுத்தம் அருகே இன்று (டிசம்பர். 20) இரவு 7.00 மணி அளவில் இருசக்கர வாகனம் மீது பொலிரோ கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் இரு சக்கர வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலே பலியானார். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


