News April 29, 2024

விளக்கேற்ற உகந்த நேரம் எது?

image

தீபம் ஏற்றுவது வேள்வி செய்வதற்குச் சமமாகும். அதனால், வீடுகளில் அதிகாலை 4.30 முதல் 6 மணி வரையிலான பிரம்ம முகூர்த்தத்திலும், மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான தினப்பிரதோஷத்திலும் விளக்கேற்றுவது மிகுந்து புண்ணியத்தைத் தரும். இந்த நேரத்தில் விளக்கேற்றுவதால், அனைத்து தடைகளும் நீங்கி, குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். குறிப்பாக, 5 முக விளக்கேற்றினால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

Similar News

News January 27, 2026

முதலிரவில் குழந்தை பிறந்தது

image

உ.பி.,யில் முதலிரவின்போது பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறியுள்ளது. காதலர்களான இருவரும் திருமணத்துக்கு முன்பே நெருக்கமாக இருந்துள்ளனர். அதனால் கருவுற்றது தெரியவர, இருவீட்டாரும் பேச்சுவார்த்தை நடத்தி திருமணம் நடைபெற்றுள்ளது. முதலிரவு அன்று பெட் ரூமுக்கு சென்ற மணமகள் வயிறு வலியால் துடிக்கவே, ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

News January 27, 2026

FTA ஒப்பந்தம்.. தமிழகத்திற்கு ஏற்படும் பயன்

image

ஐரோப்பிய யூனியன் உடனான <<18973435>>FTA ஒப்பந்தத்தால் <<>>இந்திய ஜவுளித்துறை பெரிதும் பலனடையும் என கூறப்படுகிறது. ஏனெனில், இதுவரை ஐரோப்பிய நாடுகளில் இந்திய ஆடைகளுக்கு 10% சுங்க வரி வசூலிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தால் படிப்படியாக வரி குறைக்கப்படும் பட்சத்தில், ஐரோப்பிய நாடுகளுக்கு திருப்பூரில் இருந்து ஜவுளி ஏற்றுமதி செய்வோர், வங்கதேசம், வியட்நாம் ஜவுளி ஏற்றுமதியாளர்களின் போட்டியை எளிதில் எதிர்கொள்ள முடியும்.

News January 27, 2026

பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு அல்வா விழா

image

மத்திய பட்ஜெட் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடைபெற்ற அல்வா விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு இனிப்பு வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக அல்வா பரிமாறுவது வழக்கம். இது முடிந்ததும், பட்ஜெட் ரகசியங்களை பாதுகாக்கும் நோக்கில், அதிகாரிகள் தனிமைப்படுத்தப்படுவர். வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் நடைபெற உள்ளது.

error: Content is protected !!