News December 16, 2025
திருச்சி: குறைதீர் முகாமில் பெறப்பட்ட 412 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. அதில், பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை என 412 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்களை அந்தந்த துறைகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 22, 2025
உறையூர்: மகா மாரியம்மன் கரக உற்சவ திருவிழா

உறையூர் வண்டிக்கார தெரு பகுதியில் அமைந்துள்ள மகா மாரியம்மன் 100-வது ஆண்டு கரக உற்சவ திருவிழா வரும் டிச.,30-ம் தேதி அன்று காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. மேலும் டிச.,31 அன்று மாலை 4 மணி அளவில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளதால் பக்த கோடிகள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெற கோவில் நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
News December 22, 2025
திருச்சி மக்களே கடன் தொல்லையா? இத பண்ணுங்க

திருச்சி அருகே வயலூர் முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு தெய்வானை, வள்ளி ஆகிய இருவருடனும் ஆதி நாதரையும், ஆதி நாதியையும் முருகப் பெருமான் பூசிப்பது தனி சிறப்பாகும். மேலும் அருணகிரிநாதர் பாடிய தலமாகவும், திருமுருக கிருபானந்த வாரியார் போற்றிய தலமாகவும் இது விளங்குகிறது. இக்கோயிலில் முருகனை வழிபட்டால் கடன் தொல்லை, திருமண தடை உள்ளிட்டவை தீரும் என்பது நம்பிக்கை. இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 22, 2025
மணப்பாறை முறுக்கு குறித்து மத்திய அமைச்சரிடம் கோரிக்கை

திருச்சி மாவட்டம், மணப்பாறையின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும், புவிசார் குறியீடு பெற்ற மணப்பாறை முறுக்கு தொழிலை மேம்படுத்தும் விதமாக, மத்திய அரசின் திட்டத்தின் கீழ், மணப்பாறையில் முறுக்கு உற்பத்தி கிளஸ்டர் அமைக்க வேண்டும் என, திமுக ராஜ்ய சபா எம்பி ராஜாத்தி சல்மா, மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மாஞ்சியை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் வழங்கினார்.


