News December 16, 2025

திருச்சி: குறைதீர் முகாமில் பெறப்பட்ட 412 மனுக்கள்

image

திருச்சி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. அதில், பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை என 412 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்களை அந்தந்த துறைகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.

Similar News

News December 17, 2025

திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

image

ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் வரும் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் செல்லாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 17, 2025

திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம்

image

ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு – திருச்சி பயணிகள் ரயில் வரும் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில், ஈரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு திருச்சி கோட்டை ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். இந்த ரயில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் செல்லாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 16, 2025

திருச்சி: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் அறிவிப்பு

image

திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு, இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலை நாடுநர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!