News December 15, 2025
அஜித் குமார் மரணம்.. பரபரப்பான புதிய தகவல்

திருப்புவனம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில், 6 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 7-வது குற்றவாளியாக மானாமதுரை DSP சண்முக சுந்தரம் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், SI சிவக்குமார், தலைமை காவலர் இளையராஜா பெயரும் சேர்க்கப்பட்டிருப்பது சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரியவந்துள்ளது. இதன்மூலம், குற்றஞ்சாட்டப்பட்ட போலீசாரின் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது.
Similar News
News March 4, 2026
திருவள்ளூர்: டிகிரி முடித்தால் ரூ.58,514 சம்பளம்!

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58, 514 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க <
News March 4, 2026
உலகமே தன்னுடையது என நினைக்கிறாரா ட்ரம்ப்?

ஈரான் மீது தாக்குதல் நடத்த தங்களது விமானத் தளத்தை US ராணுவம் பயன்படுத்த ஸ்பெயின் மறுத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப், வர்த்தக உறவை முற்றிலுமாக நிறுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், தங்களுக்கு யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது, தேவையான இடத்தில் போர் விமானங்களை நிறுத்துவோம் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், இந்த உலகமே தன்னுடையது என நினைக்கிறாரா டிரம்ப் என பலர் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
News March 4, 2026
திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்..

IndiGo விமான பணிப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி <<19289115>>பிரபாகரனை <<>>நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தை டிடிவி, அன்புமணி, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அரசியல் ரீதியாக கையில் எடுத்து, திமுகவை கடுமையாக அட்டாக் செய்தனர். சோஷியல் மீடியாவிலும் இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறிய நிலையில், பிரபாகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக திமுக தலைமை சற்றுமுன் அறிவித்துள்ளது.


