News December 15, 2025
திருப்பூர் மாவட்டத்தில் 340 மனுக்கள் பெறப்பட்டன!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில், இன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 340 மனுக்களை அளித்துள்ளனர் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
திருப்பூர்: பதிவு செய்தால் ரூ.5 லட்சம் கிடைக்கும்!

CMன் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். இதை SHARE பண்ணுங்க!
News December 28, 2025
திருப்பூரில் பாலியல் தொழில்! சிக்கிய 4 பேர்

திருப்பூர் கருவம்பாளையம் அருகே பாலியல் தொழில் நடப்பதாக போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மத்திய போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதில் கதிரேசன் என்ற நபர் நான்கு பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கதிரேசன் மற்றும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு பெண் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
News December 28, 2025
தாராபுரம் அருகே விபத்து!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பொன்னிவாடி அடுத்துள்ள சாலக்கடை அருகே உள்ள அப்பிம்பட்டி நால்ரோடு பகுதியில் சொகுசு காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


