News December 15, 2025
திருச்சி: குறைதீர் முகாமில் பெறப்பட்ட 412 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. அதில், பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி, மகளிர் உரிமைத் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை என 412 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்களை அந்தந்த துறைகளுக்கு அனுப்பி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 26, 2025
திருச்சி: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த சிறுமிக்கு, அவரது தந்தையே தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், சிறுமியின் தந்தை கடந்த மாதம் 27-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், திருச்சி மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் பரிந்துரையின் பேரில் சிறுமியின் தந்தை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
News December 26, 2025
திருச்சி: லாரி கவிழ்ந்து விபத்து; 11 பேர் காயம்

தொட்டியம் அருகே சீத்தப்பட்டி பகுதியில் இருந்து மரவள்ளிக் கிழங்குகளை ஏற்றிக் கொண்டு, லாரி ஒன்று நாமக்கல் நோக்கி நேற்று இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது லாரியில் ஏற்றப்பட்ட கிழங்குகள் மீது 11 தொழிலாளர்கள் அமர்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் காட்டுப்புத்தூர் அருகே லாரி சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்ததில், வெளியே அமர்ந்திருந்த 11 பேர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.
News December 26, 2025
ஸ்ரீரங்கம்: ஆண்டாள் கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் உள்ள ஆண்டாள் கண்ணாடி அறையில், பாவை நோன்பின் 10-ம் நாளான இன்று காலை நாற்றத்துழாய்முடி நாராயணன் கோளத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


