News December 15, 2025
கரூர் அருகே விபத்து; பெண் படுகாயம்

கரூர்-அரவக்குறிச்சி சாலையில் பாலகிருஷ்ணன், செல்வி இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, லோகேஷ் ஓட்டி வந்த பொலிரோ பிக் அப் வேனுடன் மோதியது. இந்த விபத்தில் செல்வி படுகாயமடைந்து, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அரவக்குறிச்சி போலீசார் சம்பவத்துக்காக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 29, 2025
மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் பரபரப்பு!

கரூர் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியைச் சேர்ந்த 30வயதுடைய பெண் மருத்துவர் பணியாற்றி வருகிறார். இவரை அங்கு சமையல் வேலை செய்யும் விஜயகுமார் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி, அனுமதியின்றி புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 29, 2025
குளித்தலையில் 8 பேர் அதிரடி கைது

கரூர் மாவட்டம் மாயனூர், தோகைமலை, பாலவிடுதி, லாலாபேட்டை, குளித்தலை, சிந்தாமணிப்பட்டி, நங்கவரம் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக ஆசைத்தம்பி (27), ராமலிங்கம் (58), பழனிசாமி (37), குணசேகர் (60), வெற்றிவேல் (47), முருகன் (51), சிவக்குமார் (45), ஜெயக்குமார் (40) ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் 204 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்
News December 29, 2025
குளித்தலையில் 8 பேர் அதிரடி கைது

கரூர் மாவட்டம் மாயனூர், தோகைமலை, பாலவிடுதி, லாலாபேட்டை, குளித்தலை, சிந்தாமணிப்பட்டி, நங்கவரம் ஆகிய காவல் நிலைய பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக ஆசைத்தம்பி (27), ராமலிங்கம் (58), பழனிசாமி (37), குணசேகர் (60), வெற்றிவேல் (47), முருகன் (51), சிவக்குமார் (45), ஜெயக்குமார் (40) ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிந்து இன்று கைது செய்தனர். மேலும் 204 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்


