News December 15, 2025
திருச்செங்கோடு அருகே சோகம்!

திருச்செங்கோடு அருகே சோமனம்பட்டியில் அய்யனார் (21) கடந்த 07-டிசம்பர் அன்று வயிற்று வலி காரணமாக விஷம் குடித்துள்ளார். முதலில் உறவினர்கள் அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்ற பிறகு மேல்சிகிச்சைக்கு கோயம்புத்தூர் KMCH மருத்துவமனையில் அனுப்பப்பட்டார். ஆனால், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து எலச்சிபாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 25, 2025
நாமக்கல் மக்களே இனி அலைச்சல் வேண்டாம்!

மக்களே பல்வேறு அரசு சேவைகளைப் பெறவதற்காக இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்
ஆதார் : https://uidai.gov.in/
வாக்காளர் அடையாள அட்டை: eci.gov.in
பான் கார்டு : incometax.gov.in
தனியார் வேலைவாய்ப்பு : tnprivatejobs.tn.gov.in
ஓட்டுநர் உரிமம் – https://parivahan.gov.in/
பட்டா தொடர்பான விவரங்களுக்கு – eservices.tn.gov.in
இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
நாமக்கல் அதிரடி சரிவு; இன்றைய நிலவரம் இதுதான்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.95-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் நாமக்கல்லில் நேற்று நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், அதன் விலையை மேலும் ரூ.5 குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து முட்டைக்கோழி விலை கிலோவுக்கு ரூ.90 ஆனது. அதேபோல், கறிக்கோழி கிலோ ரூ.124-க்கு, முட்டை கொள்முதல் விலை ரூ.6.40 விற்பனையாகி வருகிறது.
News December 25, 2025
நாமக்கல்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


