News December 15, 2025
பல்லியின் வால் எத்தனை முறை மீண்டும் வளரும் தெரியுமா?

பல்லிகள் ஆபத்துகளில் இருந்து தங்களை காத்துக்கொள்ள பயன்படுத்தும் உத்தி தான் ‘ஆட்டோடோமி’ செயல்முறை. அதாவது வாலை துண்டித்து கொள்ளும் முறை. அப்படி துண்டிக்கப்பட்ட வால் மீண்டும் முழுமையாக வளர்ந்து விடும். இதை ரீஜெனரேஷன் என்கிறது அறிவியல். பல்லிகள் எத்தனை முறை வாலை துண்டித்தாலும், அது வளரும். அதற்கு எண்ணிக்கை வரம்பு இல்லை என்றாலும், பல்லியின் ஆரோக்கியத்தை பொறுத்து மாறுபடுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
Similar News
News April 9, 2026
தேர்தலில் இருந்து காங்கிரஸ் விலகியது.. கடைசிநேர திருப்பம்

மகாராஷ்டிராவின் பாராமதி இடைத்தேர்தல் ரேஸில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர் ஆகாஷ் மோரே தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார். இதனால், அஜித் பவாரின் மனைவியும், துணை முதல்வருமான சுனேத்ரா போட்டியின்றி தேர்வாகும் சூழல் உருவாகியுள்ளது. வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளான இன்று மீதமுள்ள 30 சுயேச்சைகளையும் வாபஸ் பெற வைக்க NCP பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
News April 9, 2026
தமிழகத்தில் 4,969 வேட்புமனுக்கள் ஏற்பு..

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. அதன்படி, 4,969 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ள நிலையில், 2,467 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 89 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும்.
News April 9, 2026
வீடு, கார் இல்லை.. நாட்டின் ஏழ்மையான CM யார் தெரியுமா?

மேற்குவங்க CM மம்தா பிரமாண பத்திரத்தில் தனக்கு சொந்த வீடோ காரோ இல்லை என்று தெரிவித்துள்ளார். தன்னிடம் 9.75 கிராம் தங்கமும், ₹75,700 ரொக்கமும் இருப்பதாகவும், அசையும் சொத்து மதிப்பு ₹15.38 லட்சம் தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவர் தாக்கல் செய்துள்ள Affidavit-ஐ அடிப்படையாக கொண்டு பார்த்தால், இவரே தற்போதைக்கு இந்தியாவில் குறைவான சொத்துகளை கொண்டுள்ள CM-ஆக அறியப்படுகிறார்.


