News December 15, 2025
BREAKING: சென்னை அண்ணா பல்கலை., வழக்கில் திருப்பம்!!

தமிழகத்தையே உலுக்கிய சென்னை அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் அடக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உய்ரநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. ஞானசேகரரின் தயார் குண்டர் சட்டத்தில் அடைக்க பிறப்பித்த உத்தரவை நீக்க மேல் முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 28, 2025
சென்னை: பெண் துப்புரவு பணியாளருக்கு பாலியல் தொல்லை

துரைப்பாக்கம் ஒக்கியம்பேட்டையில் உள்ள செல்போன் கடையில் துப்புரவு பணியாளராக பணிபுரியும் 57 வயது பெண், கடையின் ஷட்டரைத் தூக்க உதவிகேட்டபோது, கந்தன்சாவடியைச் சேர்ந்த சந்துரு (34) எனபவர் அவரை வலுக்கட்டாயமாக கடைக்குள் தள்ளி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும், கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் கண்ணகி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்துருவைக் கைது செய்தனர்.
News December 28, 2025
சென்னையில் 582.16மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

சென்னை மாநகராட்சி சார்பில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் முன்கூட்டியே தரும் தகவலின் அடிப்படையில், அவர்களின் வீடுகளிலிருந்து பழைய சோபாக்கள், மெத்தைகள், மரச்சாமான்கள் மற்றும் உடைகள் ஆகிய திடக்கழிவுகளை அகற்றிடும் புதிய நடவடிக்கை கடந்த 11.10.25 அன்று தொடங்கப்பட்டது. அதன்படி, இதுவரை 12 சனிக்கிழமை நாட்களில் 1,587 பேரிடம் இருந்து 582.16 மெட்ரிக் டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
News December 28, 2025
சென்னை: பாலியல் வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை

சென்னை 14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றத்துக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. தாய் மற்றும் கள்ளக்காதலர் தாக்கல் செய்த மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. “ஒழுக்கத்துடன் குழந்தைகளை வளர்க்கும் புனிதப் பொறுப்பை தாய் கைவிட்டால், சமூகத்தின் அடித்தளம் வீழும்” என நீதிபதிகள் பி. வேல்முருகன், எம். ஜோதிராமன் கருத்து தெரிவித்தனர்.


