News December 15, 2025
விருதுநகர்: VAO லஞ்சம் வாங்கினால் என்ன செய்யலாம்?

விருதுநகர் மக்களே, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கத்திடமிருந்து கடன் வாங்கி கொடுப்பது VAO-வின் வேலையாகும். இவற்றை முறையாக செய்யமால் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறையில் (04562-252678) புகாரளிக்கலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE செய்து உதவுங்க.
Similar News
News December 27, 2025
விருதுநகர் அருகே வீடு புகுந்து 10 பவுன் நகை திருட்டு

வத்திராயிருப்பு சேனியக்குடி தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (41).இவர் செங்கல் சூளை வைத்து தொழில் செய்து வருகிறார். பாலகிருஷ்ணன் வீட்டு பீரோவில் வைத்திருந்த 10 பவுன் எடையுள்ள தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து விசாரித்த போது, கோபாலபுரத்தை சேர்ந்த சீனிவாசன் (30) என்பவர் வீட்டிற்கு வந்து சென்றது தெரியவந்தது.இது குறித்து புகாரில் வத்திராயிருப்பு போலீசார் சீனிவாசனை தேடி வருகின்றனர்.
News December 27, 2025
விருதுநகர் மக்களே கலெக்டரின் மிக முக்கிய அறிவிப்பு.!

விருதுநகர் மாவட்டத்தில் SIR பணி நிறைவுபெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்களார்கள் பெயர் சேர்க்கை, நீக்கம், திருத்தம், மேற்கொள்ள இன்று 27ம் தேதி, நாளை 28ம் தேதி மற்றும் ஜனவரி 3,4 தேதிகளிலும் சம்பந்தபட்ட வாக்குசாவடிகளில் சிறப்பு முகாம் நடைபெறும். தற்போது வௌியாகியுள்ள பட்டியலில் உங்க பெயர் உள்ளதா என்று <
News December 27, 2025
ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் ரேபிஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோமதி கலந்து கொண்டு ரேபிஸ் நோயின் பாதிப்புகள் குறித்தும், ரேபிஸ் நோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கினார். இதில் ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


