News April 29, 2024
கரூர்: மீன் வியாபாரியை அடித்து கொலை மிரட்டல்

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா லாலாபேட்டை ஆண்டியப்பன் நகரை சேர்ந்தவர் வீராசாமி (70). இவர் மீன் வியாபாரம் செய்து வருகின்றார். நேற்று முன்தினம் இவரின் வீட்டின் கேட்டை சிலர் தட்டிக் கொண்டிருந்துள்ளனர். இதுகுறித்து கேட்ட வீராச்சாமி, மனைவி பாப்பாத்தியை அடித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தமிழரசன், மோகன் உள்ளிட்ட 5 பேர் மீது லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 7, 2025
கரூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

கரூர் மக்களே, வீடுகள், வணிக வளாகங்கள், அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!
News November 7, 2025
கரூரில் இன்று பல இடங்களில் மின்தடை…!

கரூர் மாவட்டம்; புலியூர், புகழூர், கரூர் டவுன், அரவக்குறிச்சி, ஆண்டிச்செட்டிப்பாளையம், ஒத்தக்கடை உள்ளிட்ட 6 துணை மின்நிலையங்களில் நிலையங்களில் இன்று (நவ.07) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக மேற்குறிப்பிட்ட துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 7, 2025
கரூரில் 3 பேர் அதிரடி கைது!

கரூர் மாவட்டம், குளித்தலை சிந்தாமணிப்பட்டி பகுதியில் வெளியூர் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தது தொடர்பாக மைலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மைதின் (48), கமருதீன் (58), மற்றும் குருணிக்குளத்துப்பட்டியைச் சேர்ந்த முஜீப் ரகுமான் (50) ஆகிய மூவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து அசாம் மாநில லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


