News December 15, 2025

பாஜகவுக்கு எதிராக விஜய் பேசுவதில்லை: பெ.சண்முகம்

image

கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய்யின் அணுகுமுறை மாறிவிட்டதாக சிபிஎம் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். கொள்கை எதிரி பாஜக, அரசியல் எதிரி திமுக என்று முன்னர் கூறி வந்த விஜய், கரூர் சம்பவத்திற்கு பிறகு எந்த இடத்திலுமே பாஜகவை பற்றி பேசவில்லை என விமர்சித்துள்ளார். சிபிஐ விசாரணை நடைபெற்று வருவதால் தான், பாஜகவை விஜய் விமர்சிப்பதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News December 26, 2025

நீலகிரி மக்களுக்கு கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நீலகிரி மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், அத்தியாவசிய பொருட்கள் பெறும் ஏஏஒய் மற்றும் பிஎச்எச் குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அடையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகையினை, வரும் (31/12/2025)-க்குள் ரேஷன் கடையிலுள்ள பிஓஎஸ் இயந்திரத்தில் பதிவு செய்யுமாறு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறியுள்ளார்.

News December 26, 2025

REWIND: சுனாமி பேரலை 8,000 தமிழர்களை கொன்ற நாள்!

image

ஆழிப்பேரலை(Tsunami) கொத்து கொத்தாக மக்களை கொன்று குவித்த துயரத்தின் 21-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. தமிழகத்தில் 2004-ம் ஆண்டு இதே நாளில் கடற்கரை ஓரங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாடியவர்கள் உள்பட 7,993 பேர் உயிரிழந்தனர். தாய், தந்தை, மனைவி, அக்கா, தம்பி, பிள்ளைகள் என உறவுகளை இழந்தவர்கள் இன்னும் அந்த துயரிலிருந்து மீளாமல் கடலில் மலர் தூவி, பால் ஊற்றி தங்களது அஞ்சலியை செலுத்தினர்.

News December 26, 2025

சகல சௌபாக்கியம் தரும் வெள்ளிக்கிழமை வழிபாடு!

image

வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோயிலில் உள்ள மகாலட்சுமிக்கு, அபிஷேகத்திற்குத் தேவையான பசும்பாலை வழங்கினால் பண வரவு உண்டாகும். ➤பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட, செல்வம் பெருகும் ➤சுக்ர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை இதழால் அர்ச்சனை செய்ய தனலாபம் கிடைக்கும் ➤மாலையில், சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர்சக்திகள் இருந்தால் விலகிவிடும். SHARE IT.

error: Content is protected !!