News December 15, 2025
நெல்லை: தொழிலாளிக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு

திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவருக்கும் அவரது உறவினர் முருகன் என்பவருக்கும் நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முப்பிடாதி அம்மன் கோயில் அருகே வெங்கடேசை 4 பேர் கும்பல் வெட்டி சாய்த்தது. படுகாயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பேட்டை போலீசார் வழக்கு பதிந்து முருகன் (19) என்பவரை நேற்று கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
Similar News
News December 26, 2025
நெல்லை: பெண் குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY..!

நெல்லை மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வைப்பு தொகை வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் 3 லட்சமாக வழங்கப்படும். விண்ணப்பிக்க இங்கு <
News December 26, 2025
நெல்லை: பிரதமரின் வீட்டு வசதி திட்டம் பற்றி தெரியுமா?

நெல்லை மக்களே நடுத்தர வாசிகளின் சொந்த வீடு கனவை நிறைவேற்றும் சூப்பர் திட்டமாக பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வீடு கட்ட ரூ.2.30 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <
News December 26, 2025
நெல்லை: பெற்றோர் கல்லறை முன் தற்கொலை!

மூலைக்கரைப்பட்டி அருகே துத்திகுளத்தைச் சேர்ந்த விவசாயி பாலசுப்பிரமணியன் (50). கடந்த 2 ஆண்டுகளாக மனநிலை பாதிப்பு, மது பழக்கம் இருந்தது. இந்நிலையில் தோட்டத்தில் பெற்றோர் கல்லறை முன் விஷம் குடித்துவிட்டு, தனது சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


