News December 15, 2025
வேலூர்: 8 பவுன் நகை திருடிய 2 பெண்கள்!

விருபாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(41). இவருடைய மணைவி இளையராணி(37) . கடந்த அக்டாபர் மாதம் சக்திவேலுக்கு விபத்து ஏற்பட்டு திண்டுக்கல்லில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் 8 பவுன் நகை திருடு போனது. இதுகுறித்த விசாரணையில், கீழ்தளத்தில் குடியிருக்கும் லட்சுமி, அஞ்சலி ஆகியோர் தங்களது கணவர்கள் உதவியுடன் திருடியது தெரியவந்தது.
Similar News
News December 25, 2025
வேலூர் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் தகவல்

தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் (NADCP) கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வரும் 29-ம் தேதி முதல் ஜனவரி 18-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. எனவே கால்நடை உரிமையாளர்கள், விவசாயிகள் இந்த முகாமை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
வேலூர் மக்களே கேஸ் புக் பண்ண ஒரு Hi போதும்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 25, 2025
வேலூர்: 600 போலீசார் விரைந்தனர்!

கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக வரும் டிச.26, 27 தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். இதை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் இரு மாவட்டங்களிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அதன்படி வேலூர் மாவட்டத்தில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக கள்ளக்குறிச்சி சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


