News December 15, 2025

பரமக்குடியில் பேருந்திற்கு அடியில் சிக்கிய மாடு

image

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பேருந்து நிலையத்தில் இன்று இரவு (எண்:19) நகர் பேருந்தின் பின்பக்கத்தில் மாடு சிக்கி கொண்டது. அரை மணி நேரத்திற்கும் மேலாக மாட்டை மீட்க முடியாமல் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் போராடினர். பின் தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாட்டை பத்திரமாக மீட்டனர்.

Similar News

News December 24, 2025

இராமநாதபுரம் மாவட்ட போலீசார் எண்கள்

image

எஸ்.பி – 04567-230740
ASP குற்றம் – 04567-230740
ASP பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான விசாரணை பிரிவு – 04567-299813
DSP ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு – 04567-230036
DSP இராமநாதபுரம் – 04567-299716
DSP இராமேஸ்வரம் – 04573-221256
DSP பரமக்குடி – 04564-226948
DSP திருவாடானை – 04561-254282
DSP கீழக்கரை – 04567-241566
DSP கமுதி – 04576-223231
DSP முதுகுளத்தூர் – 04576-290208
*SHARE

News December 24, 2025

இராம்நாதபுரம்: எம்.பி-யின் சகோதரர் மரணம்

image

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய செயலாளர், தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவர், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனியின் சகோதரர் K.சிராஜுத்தீன் இன்று உடல் நலக் குறைவினால் மரணம் அடைந்தார். மறைந்த K.சிராஜுத்தீன் பிரபல S.T.கொரியர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனராக செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News December 23, 2025

இராம்நாடு: தனியார் பேருந்தில் 31 பவுன் நகை கொள்ளை

image

திருவாடானை அருகே கீழக்குடியைச் சேர்ந்தவர் தொண்டியம்மாள்(50). இவர் தனது பேரன் பிறந்த நாள் விழாவுக்காக கோவை சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை இரவு தனியார் பேருந்தில் ஊருக்குப் புறப்பட்டார். நேற்று காலை பேருந்து திருவாடானைக்கு வந்தது. அப்போது தொண்டியம்மாள் தனது பையைப் பார்த்தபோது, அதிலிருந்த 31 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது. திருவாடானை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!