News December 15, 2025

உடுமலை மூணாறு சாலையில் காட்டெருமைகள் உலா!

image

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தின் வழியாக மூணாறு சாலை உள்ளது. தற்பொழுது வனப்பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக வனவிலங்குகள் நிலப்பரப்பை நோக்கி வர துவங்கியுள்ளன. இந்த நிலையில் காட்டெருமைகள் யானைகள் அதிகளவு நடமாட்டம் உள்ளதால், வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் அதிக ஒலி எழுப்பக் கூடாது, வாகனங்களை விட்டு எழுப்பக் கூடாது என உடுமலை வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News December 25, 2025

வெள்ளகோவில் அருகே சோகம்

image

வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி(76). இவர் தனது வீட்டிற்கு அருகில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருக்கு பல வருடங்களாக முழங்கால் வலி இருந்து வந்தது. இதனால் மனம் உடைந்த குப்புசாமி செடிகளுக்கு வைக்கும் சல்பாஸ் என்ற விஷ மாத்திரையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

நல்லூர் அருகே வாசமாக சிக்கிய மூவர்: அதிரடி கைது

image

திருப்பூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பிரிவு அருகே, சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மோனிஸ்குமார், சூர்யா அரவிந்த், சேக் அலாவுதீன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

News December 25, 2025

நல்லூர் அருகே வாசமாக சிக்கிய மூவர்: அதிரடி கைது

image

திருப்பூர் நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் பிரிவு அருகே, சட்டவிரோதமாக லாட்டரி விற்பனை நடைபெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொண்ட போலீசார், லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட மோனிஸ்குமார், சூர்யா அரவிந்த், சேக் அலாவுதீன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

error: Content is protected !!