News December 15, 2025

வந்தே பாரத் ரயில் மீது கல்வீசி தாக்குதல் – பயணிகள் காயம்

image

சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயில் விருத்தாச்சலம் கடந்து வந்துகொண்டிருந்தபோது, சிறுவர்கள் ரயிலில் கல்லைக் கொண்டு எறிந்ததில், கண்ணாடி நொறுங்கி பயணிகள் சிலர் காயமடைந்தனர்.
இதனையடுத்து திருச்சி ரயில் நிலையம் வந்தே பாரத் ரயிலில் காயம் அடைந்த பயணிகளிடம், முதுநிலை மருத்துவ கண்காணிப்பாளர் விஜயலட்சுமி நேரில் சந்தித்து அவர்களது உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

Similar News

News December 19, 2025

திருச்சி: ஆடு மேய்த்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்!

image

லால்குடி அருகே கீழ மணக்கால் கிராமத்தை சேர்ந்தவர் மருதம்பாள் (78). இவர் சம்பவத்தன்று லால்குடி – அன்பில் சாலையில் கீழ மணக்கால் பஸ் நிறுத்தம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக அதவத்தூர் பகுதியை சேர்ந்த மதிவாணன் (39) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் மருதம்பாள் மீது மோதியதில், பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிந்த லால்குடி போலீசார் மணிவாணனை கைது செய்தனர்.

News December 19, 2025

திருச்சி: முக்கிய பகுதிகளில் நாளை மின்தடை

image

திருச்சி மாவட்டத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (டிச.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக திருச்சி மத்திய பேருந்து நிலையம், வஉசி சாலை, கலெக்டர் ஆபிஸ் சாலை, கண்டோன்மென்ட், வாலாஜா சாலை, மன்னார்புரம், பொன்மலைப்பட்டி, பெரிய சூரியூர், குண்டூர், வேங்கூர், முசிறி, தண்டலைபுதூர், மணமேடு, தும்பலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 6 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

News December 19, 2025

திருச்சி அருகே இளம்பெண் தற்கொலை

image

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அடுத்த சரளப்பட்டியைச் சேர்ந்தவர் திலகவதி. இவருக்கும் அவரது கணவர் பிரபாகரனுக்கும் இடையே விவாகரத்து வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கின் தீர்ப்பு 3 நாட்களில் வழங்கப்பட இருந்த நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான திலகவதி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த வையம்பட்டி போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!