News December 15, 2025
அனைவரும் சமமாக நடத்தப்படுவதில்லை: நடிகை

இந்த நாட்டில் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படுவதில்லை என்று கேரள பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை வேதனை தெரிவித்துள்ளார். ஒரு குற்றவாளியை பொருத்தவரை, வழக்கு கையாளப்பட்ட விதத்தில் ஏற்பட்ட மாற்றங்களை அரசுத் தரப்பு கவனித்ததாகவும் கூறியுள்ளார். 6 பேருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். இவ்வழக்கில் திலீப் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 4, 2026
திருப்பூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை.. நீதிமன்றம் அதிரடி!

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே 2024ம் ஆண்டு 17 சிறுமியை பாலியல் வண்கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான காங்கேயம், வீரணம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார் (24) கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம், காங்கேயம், அமராவதி நகரை சேர்ந்த ஜெரின் (25) என்பவருக்கு 4, மற்றும் மைக்கேல் என்பவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
News March 4, 2026
உங்கள் உடல் உறுப்புகளை கொல்லும் உணவுகள்

நமது உடலில் உள்ள அனைத்தும் சீராக இயங்கினால் மட்டுமே காலத்துக்கும் நாம் ஆரோக்கியத்துடன் இருக்கமுடியும். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் இருக்கும் உணவு பழக்கங்களால் இது சாத்தியம் இல்லாத ஒன்றாக மாறிப்போய் இருக்கிறது. நீங்கள் சாப்பிடும் சில பொருள்கள் உங்கள் உடல் உறுப்புகளை மெல்ல கொல்கிறதாம். அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை வலதுபக்கம் SWIPE பண்ணுங்கள். விழிப்புணர்வுக்காக SHARE THIS.
News March 4, 2026
திமுகவில் இருந்து விலகல் அதிமுகவில் இணைந்தார்

மு.க.அழகிரியின் தீவிர ஆதரவாளர்களான மதுரை மன்னன், எஸ்.ஆர்.கோபி உள்ளிட்டோர் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அந்த வகையில், மு.க.அழகிரிக்கு வலது கை போல் செயல்பட்டவரும், அழகிரி பேரவை ஈரோடு மாவட்டத் தலைவருமான சுகுணா சத்தியன், திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். விரைவில் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் இபிஎஸ்ஸை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.


