News December 14, 2025
மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சென்னை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாநில திட்ட இயக்குனர் ஆணைக்கிணங்க, மாவட்ட ஆட்சியர் ஒப்புதலின்படி மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் வரும் 16-ம் தேதி ஆண்டிமடம் தனியார் பள்ளியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று முகாம் குறித்தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Similar News
News January 15, 2026
அரியலூர்: ரூ.5 லட்சம் இலவச காப்பீடு! Apply பண்ணுங்க!

அரியலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். இதனை SHARE பண்ணுங்க.!
News January 15, 2026
அரியலூர்: ரயில் விபத்தில் ராணுவ வீரர் பலி – சோகம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்குமார்(47). இந்திய ராணுவத்தில் சுபேதாரராக பணியாற்றி வந்த இவர் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வருவதற்காக தெலுங்கானா வாரந்தாங்கல் பகுதி அருகே வந்த போது, எதிர்பாரா விதமாக ரயில் கதவில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் இன்று மதியம் சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது.
News January 15, 2026
அரியலூர்: கணவன் அடித்தால் CALL பண்ணுங்க!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் கணவன் அடிப்பது, வரதட்சணை கேட்டு துன்புறுத்துவது போன்ற குடும்ப வன்முறைகளை திருச்சி மாவட்ட பெண்கள் யாரேனும் எதிர்கொண்டால், தயங்காமல் மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலரை (9842074680) தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!


