News December 14, 2025

ஆபத்தாக நிற்கும் மரத்தை அகற்ற கோரிக்கை

image

ஆற்றூர் பகுதி கிறிஸ்தவ ஆலயம் முன் சாலையோரம் மாமரம், புளியமரம் என 2 மரங்களின் வேர் பகுதி சேதமடைந்து ஓட்டை விழுந்த நிலையிலும், மண்ணின் பிடிப்பற்ற நிலையிலும் காணப்படுகிறது. எப்போது வேண்டுமானாலும் காற்றின் வேகத்தில் இந்த மரங்கள் முறிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி மரங்களை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News December 29, 2025

குமரி : இது தெரியாம சிலிண்டர் வாங்காதீங்க!

image

கன்னியாகுமரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கு காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A – 26 மார்ச் – 2026 என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க!

News December 29, 2025

குமரி: கண்ணாடியால் முதியவர் உயிரிழப்பு

image

குமரி மாவட்டம், கொல்லால் அருகே விரி விளையைச் சேர்ந்தவர் செல்வராஜ் (60) கூலி வேலை செய்து வந்த இவருக்கு குடிப்பழக்கம் இருந்து. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டில் பொருட்களை அடித்து உடைப்பது வழக்கம்.நேற்று வீட்டில் உள்ள கண்ணாடியை உடைத்ததில் கையில் நரம்பு துண்டித்த நிலையில் மயங்கி விழுந்தார். மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். இதுக்குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை.

News December 28, 2025

குமரியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

சுசீந்திரம் அருகே கொத்தன்குளத்தை சேர்ந்தவர் வெர்ஸ்லின் ஹரணி (23). இவர் நர்சிங் படித்துள்ளார். இவருக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டு வந்தது. இந்த காரணத்தால் நேற்று (டிச.27) வெர்ஸ்லின் ஹரணி வீட்டு படுக்கை அறையில் சேலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த சுசீந்திரம் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!