News December 14, 2025
கன்னியாகுமரியில் கட்டுப்பாடு விதித்த எஸ்பி

மருங்கூர் அருகே தனியார் ரிசார்ட் ஒன்றில் அண்மையில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டதை தொடர்ந்து, அதில் தொடர்புடைய 8 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 70-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் ரிசார்ட் மற்றும் ஹோட்டல்கள் அனுமதியின்றி நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 17, 2025
குமரி: ONLINE-ல் பட்டா பெறுவது எப்படி?

குமரி மக்களே புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியுமா? ஆம், <
News December 17, 2025
குமரியில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

செம்பொன்விளை, சேரமங்கலம், முட்டம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (டிச.18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் செம்பன்விளை, திக்கணங்கோடு, இரணியல், திங்கள்சந்தை, முட்டம், அம்மாண்டிவிளை, சாத்தன்விளை, திருநயினார்குறிச்சி, மணவாளக்குறிச்சி, நெய்யூர், சைமன்காலனி ஆகிய இடங்களுக்கும் அதனை சுற்றியுள்ள துணை கிராமங்களுக்கும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது. SHARE IT
News December 16, 2025
குலசேகரம் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

திற்பரப்பு தேனீ வளர்ப்பு தொழிலாளி தீபுவின் மகன் அபிஷேக் (17)
பைக் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வந்தார். சின்னம்மை நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்தவாறு சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாடியிலுள்ள தனது அறையில் தூங்கச் சென்றுள்ளார். இன்று காலையில் தாயார் கவிதா டீ கொடுக்க அவரது அறைக்கு சென்ற போது அபிஷேக் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.


