News December 14, 2025
தாய்லாந்து கடற்கரை பகுதிகளில் ஊரடங்கு!

கம்போடியாவின் <<18550033>>கோ கோங்<<>> மாகாணத்தின் மீது தாய்லாந்து தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இருநாடுகள் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தாய்லாந்தின் தென்கிழக்கு மாகாணமான டிராட்டில் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சுற்றுலா தீவுகள் தவிர்த்து, 5 மாவட்டங்களில் ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக கிழக்கு சாகியோ மாகாணத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்ந்து அமலில் உள்ளது.
Similar News
News April 9, 2026
அதிமுக வேட்பாளர் மயக்கம்.. ஹாஸ்பிடலில் அனுமதி!

திருவிடைமருதூர் அதிமுக வேட்பாளர் இளமதி சுப்பிரமணியன் திடீரென மயங்கி விழுந்ததால் ஆடுதுறையில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வண்ணக்குடி பகுதியில் பிரசாரம் செய்தபோது மயங்கி விழுந்த அவரை கட்சி நிர்வாகிகள் மீட்டு ஹாஸ்பிடலில் சேர்த்தனர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<-se>>#TNElection2026<<>>
News April 9, 2026
தமிழ் நடிகை தற்கொலை.. பரபரப்பு தகவல்

சீரியல் நடிகை சுபாஷினி தற்கொலை செய்துகொண்டது சின்னத்திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், அவரது உடலை இலங்கைக்கு கொண்டு செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது. FIR-ல் உள்ள அவரது பெயருக்கும், பாஸ்போர்ட்டில் உள்ள பெயருக்கும் முரண்பாடு உள்ளதாம். இச்சிக்கலை களைய, சுபாஷினியின் குடும்பத்தார் முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
News April 9, 2026
3 மாநில தேர்தல்: 1 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

நண்பகல் 1 மணி நிலவரப்படி புதுச்சேரியில் 56.83% வாக்குகள் பதிவாகியுள்ளதாக ECI தெரிவித்துள்ளது. கேரளாவில் 49.70% மற்றும் அசாமில் 59.63% வாக்குகள் பதிவாகியுள்ளது. வெயில் சுட்டெரிக்கும் நிலையில், வாக்குச்சாவடிகளில் போதுமான பந்தல் வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ECI கூறியுள்ளது. மக்களும் ஆர்வமுடன் வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


