News December 14, 2025
தஞ்சை: வழிபறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே கடந்த 12ஆம் தேதி ராமச்சந்திரன் என்பவரை இருசக்கர வாகனத்தில் சென்றபோது வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்கச்சியினை வழிப்பறி செய்ததாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை கொண்டு டேனியல் ஆபிரகாம், ஆண்டனி ஆர்தர் டேவிஸ் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
Similar News
News December 16, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News December 16, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (டிச.16) மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News December 16, 2025
தஞ்சை: 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை

தஞ்சாவூர் மாவட்டம், வல்லத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான சிதம்பரம், 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிதம்பரம், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.


