News December 14, 2025
வேலூர் ‘ரெட் ஜோன்’ ஆக அறிவிப்பு!

வேலூர் மாவட்டம், அரியூர் இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வரும் 17-ம் தேதி வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலுக்கு வருகை தர உள்ளார். இதனை முன்னிட்டு, பொற்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு, ‘ரெட் ஜோன்’ ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற டிச-17ஆம் தேதி ஸ்ரீபுரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 17, 2025
குடியாத்தம் தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்!

குடியாத்தம் சப்-கலெக்டர் அலுவலகத்தில் நாளை டிச.18 காலை 11 மணியளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் ஆர்டிஓ சுபலட்சுமி தலைமையில் நடைபெற உள்ளது. இதில் பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். எனவே, குடியாத்தம், கே.வி.குப்பம், பேரணாம்பட்டு ஆகிய தாலுகாக்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதி நிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகள் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News December 17, 2025
ஜனாதிபதி முர்முவை வரவேற்ற வேலூர் கலெக்டர்!

ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது சுற்றுப்பயணத்தை நேற்று முதல் தொடங்கி, வருகிற 22-ந் தேதி வரை கர்நாடகா, தமிழ்நாடு, தெலுங்கானா மாநிலங்களில் மேற்கொள்கிறார். இந்நிலையில் இன்று (டிச.17) திருப்பதி ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலுக்கு 11:30 மணிக்கு வருகை தந்தார். அவரை வேலூர் கலெக்டர் சுப்புலெட்சுமி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
News December 17, 2025
ஜனாதிபதிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு!

வேலூர் மாவட்டம் அரியூரில் உள்ள ஸ்ரீபுரம் தங்க கோயிலுக்கு இன்று (டிச.17) வருகை தந்த இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு பொற்கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பின் போது தமிழக கவர்னர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் முருகன், தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


