News December 14, 2025
நாகை: இலவச தையல் இயந்திரம் பெற அழைப்பு

நாகை மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் வகுப்பை சேர்ந்த வறுமையில் வாழும் நபர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மின் மோட்டார் பொருத்தப்பட்ட இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளன. இதற்கு 20-45 வயதுக்குட்பட்ட, ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்கு குறைவாக உள்ள நபர்கள், ஆட்சியர் அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
நாகை: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், நாகை மாவட்ட மக்கள் 04365-248460 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
News December 26, 2025
நாகை: தொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

நாகை மாவட்டத்தில் உள்ள புதிய தொழில் முனைவோர் தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் (NEEDS) மூலம் 12 / ஐடிஐ / டிப்ளமோ / டிகிரி முடித்தவர்களுக்கு புதிய தொழில் தொடங்க ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை கடன் மானியம் வழங்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு நாகை மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
நாகை: ரோடு சரியில்லையா? சரி செய்ய எளிய வழி!

நாகை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம்.<


