News December 14, 2025

ஆந்திரா சென்று ரூ.6 லட்சத்தை மீட்ட புதுச்சேரி போலீசார்

image

புதுச்சேரி கொசப்பாளையம் பகுதியில் மூதாட்டியிடம் கடந்த மாதம் 24-ந்தேதி 22 பவுன் நகை, ரூ.1,10,000 ரொக்கம் பறித்த சென்ற வழக்கில், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த வள்ளி, சாராத ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அப்போது பணத்தை அவர்கள் ஆந்திராவில் பதுக்கி வைத்துள்ளதாக கூறியதை தொடர்ந்து, குற்றவாளிகளை அழைத்து கொண்டு ஆந்திரா சென்ற புதுச்சேரி போலீசார் ரூ.6 லட்சம் பணத்தை அதிரடியாக மீட்டனர்.

Similar News

News December 17, 2025

புதுச்சேரிக்கு சிறப்பு நிதி வழங்க கோரிக்கை

image

டிட்வா’ புயலால் ஏற்பட்ட கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்துக்கு, சிறப்பு நிதி நிவாரணம் வழங்க வேண்டும் என MP செல்வகணபதி, நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தார். புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால், மத்திய அரசு உடனடியாக சிறப்பு மானியங்கள் வழங்கி, மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

News December 17, 2025

புதுச்சேரி: சிலிண்டருக்கு கூடுதல் பணம் கேட்கிறார்களா?

image

புதுச்சேரி மக்களே, உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்கிறார்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரளியுங்கள். இண்டேன், பாரத்கேஸ் மற்றும் HP-க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் தெரியபடுத்த ஷேர் பண்ணுங்க!

News December 17, 2025

புதுச்சேரி மாநில காவல்துறை மாநாடு

image

புதுவை மாநில காவல் துறை மாநாடு இன்று ராஜீவ்காந்தி சிலை அருகே நடைபெற்றது. இதில் முதல்வர் ரங்கசாமி சபாநாயகர் செல்வம் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் அனைத்து காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். முதல்வர், மாநாட்டை குத்து விளக்கேற்றித் துவக்கி வைத்து மற்றும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

error: Content is protected !!