News December 14, 2025

அந்நிய செலாவணி கையிருப்பு 68,726 கோடி டாலராக உயர்வு

image

டிச.5-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு $68,726 ஆக உயர்ந்துள்ளதாக RBI தெரிவித்துள்ளது. இது, கடந்த நவ.28-ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 187 கோடி டாலர்கள் குறைந்து $68,623 கோடியாக ஆக இருந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து ₹90.57-ஆக உள்ள நிலையில், இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை எனவும் RBI விளக்கம் அளித்துள்ளது.

Similar News

News December 26, 2025

மதவெறியர்களின் அட்டூழியங்கள்: சீமான்

image

வடமாநிலங்களின் சில பகுதிகளில் கிறிஸ்துமஸ் விழாக்களில் சிலர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்நிலையில், மதவெறியர்களின் அட்டூழியங்களை ஒருநாளும் அனுமதிக்க முடியாது என்று சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவ, இஸ்லாமிய பெருமக்கள் மீது தொடரும் மதவெறி தாக்குதல் எல்லாம் திட்டமிடப்பட்ட இன ஒதுக்கல் கோட்பாட்டின் செயல் வடிவமே என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

News December 26, 2025

இது காட்டுமிராண்டித்தனம்: ஜான்வி கபூர்

image

எந்தவொரு நிலையிலும் தீவிரவாதம் மனிதநேயத்தை மறப்பதற்கு முன்பு அதை கண்டித்து எதிர்க்க வேண்டும் என்று ஜான்வி கபூர் உணர்ச்சிபொங்க கூறியுள்ளார். வங்கதேசத்தில் இந்து இளைஞர் சிபு சந்திர தாஸ் கொல்லப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வங்கதேசத்தில் நடப்பது காட்டுமிராண்டித்தனமானது என்றும் அவர் காட்டமாக கண்டித்துள்ளார்.

News December 26, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை ▶குறள் எண்: 561 ▶குறள்: தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. ▶பொருள்: நடைபெற்ற குற்றங்களை நடுநிலை தவறாமல் ஆராய்ந்தறிந்து, மீண்டும் அவை நிகழா வண்ணம் அக்குற்றங்களுக்கேற்பத் தண்டனை கிடைக்கச் செய்வதே அரசின் கடமையாகும்.

error: Content is protected !!