News December 14, 2025
மதுரை: மூதாட்டியிடம் செயின் பறிப்பு; CCTV யில் சிக்கிய மூவர்

மதுரை மாவட்டம், தனிச்சியத்தை சேர்ந்த செல்லம்மாள்(80), 2 நாட்களுக்கு முன் இரவு வீட்டின் முன்பு இருந்தபோது 2 பேர், அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பறிக்க முயல, செயின் அறுந்தது. அதில் 3 பவுன் செயினை அறுத்து கொண்டு தப்பினர். சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து சந்தோஷ் பரமன்(23) ,கருப்புசாமி(23), தென்னரசு(23) ஆகிய 3 பேரை கைது செய்து 3 பவுனை வாடிப்பட்டி போலீசார் இன்று மீட்டனர்.
Similar News
News December 24, 2025
மதுரையில் வைரலான புதிய சாலை.!

மதுரை காமராஜர் சாலையில் சொகுசுகார் நிறுத்திய இடத்தை தவிர்த்து, சுற்றிலும் தார் சாலை அமைத்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலங்கார் திரையரங்கம் அருகே நேற்று இரவு சாலை பணி நடைபெற்றுள்ளது. நீண்ட நேரம் காரை எடுக்காத நிலையில் மீதமுள்ள இடங்களில் மட்டும் சாலை பணி நடந்துள்ளது. இதனால் பாதியில் விடப்பட்ட சாலை பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 24, 2025
மதுரையில் வைரலான புதிய சாலை.!

மதுரை காமராஜர் சாலையில் சொகுசுகார் நிறுத்திய இடத்தை தவிர்த்து, சுற்றிலும் தார் சாலை அமைத்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அலங்கார் திரையரங்கம் அருகே நேற்று இரவு சாலை பணி நடைபெற்றுள்ளது. நீண்ட நேரம் காரை எடுக்காத நிலையில் மீதமுள்ள இடங்களில் மட்டும் சாலை பணி நடந்துள்ளது. இதனால் பாதியில் விடப்பட்ட சாலை பணியை முழுமையாக மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 23, 2025
மதுரை: கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூர் வண்ணம்பாறைப்பட்டியை சேர்ந்த விவசாயி கண்ணன் (25), நேற்று முன்தினம் மாலை மேலூருக்கு சென்றுவிட்டு, அவர் சொந்த ஊருக்கு டூவீலரில் திரும்பினார். அப்போது ஆட்டுக்குளம் செல்விநகர் அருகே எதிரே வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


