News December 14, 2025
மயிலாடுதுறை மக்களுக்கு அறிவிப்பு!

தமிழ் ஆட்சி மொழி சட்டம் 1956 இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு வார கால ஆட்சி மொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது. வருகிற டிசம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 26 வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கு சிறப்பு பயிற்சி முகாம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
Similar News
News December 25, 2025
மயிலாடுதுறை: 12th போதும்.. அரசு வேலை ரெடி!

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத்துறையில் உள்ள கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 41
3. வயது: 18 – 48
4. சம்பளம்: ரூ18,200 – ரூ.67,100
5. கல்வித்தகுதி: 12th & MLT (Medical Laboratory Technology)
6. கடைசி தேதி: 29.12.2025
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News December 25, 2025
மயிலாடுதுறையில் 452 பேருக்கு பணி நியமனம்!

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு கல்லூரியில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைந்த கல்லூரிகளுக்கான நான் முதல்வன் திட்ட வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ரேவதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்டத்தில் உள்ள 12 கல்லூரிகளை சேர்ந்த 1,524 மாணவ மாணவிகள் பங்கேற்றனர். அதில், 20 நிறுவனங்கள் மூலம் 452 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
News December 25, 2025
மயிலாடுதுறை: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற <


