News December 14, 2025

திண்டுக்கல்லில் உச்சம் தொட்ட விலை!

image

திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பூக்கள் சாகுபடி அதிக அளவில் நடைபெறுவதால், தற்போது, முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ விழாக்கள் தொடங்கியுள்ள சூழலில், சந்தைக்குப் பூக்கள் வரத்து குறைந்து தேவை அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து இன்று மல்லிகைப்பூவின் விலை ஒரு கிலோ ₹2000-க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Similar News

News December 16, 2025

திண்டுக்கல்லில் இலவச தையல் பயிற்சி!

image

திண்டுக்கல்லில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. 300 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், தையல் தொடர்பாக அனைத்து நுட்பங்களும் கற்றுத்தரப்படவுள்ளது. இதற்கு 8வது படித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை<> க்ளிக் <<>>செய்யவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News December 16, 2025

திண்டுக்கல் அருகே விபத்து: சம்பவ இடத்திலேயே பலி!

image

திண்டுக்கல், சாணார்பட்டி அருகே, வடகாட்டுபட்டியை சேர்ந்த தனசேகர் (வயது 28). இவர், திண்டுக்கல் – நத்தம் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, போக்குவரத்து காலனி அருகில் டிராக்டர் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 16, 2025

திண்டுக்கல்: கணவன் அடித்தால் உடனே CALL!

image

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதுபடி, திண்டுக்கல் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இங்கு <>க்ளிக் <<>>செய்து மாவட்ட குடும்ப வன்முறை தடுப்புச் சட்ட பாதுகாப்பு அலுவலர் எண்ணை அறிந்து அலுவலக நேரங்களில் அழைத்து புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!