News December 14, 2025
நெல்லை: ECR ல் ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே, நவ்வலடி பகுதியில், கிழக்கு கடற்கரை சாலையில், நேற்று (டிச.13) இரவு மோட்டார் சைக்கிளில் போதையில் வந்த இருவர், திடீரென ஆத்தங்கரை பள்ளிவாசல் என்னுமிடத்தில், திடீர் விபத்து ஏற்பட்டு தூக்கி வீசப்பட்ட நிலையில், இருவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து திசையன்விளை போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 12, 2026
நெல்லை: 74 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

நெல்லை மாவட்டத்தில் விசார பருவத்திற்கான நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது இந்நிலையில் நெல்லை கலெக்டர் சுகுமார் உத்தரவின் பேரில் 74 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதில் தேவையான அனைத்து உபகரணங்களும் காலி சாக்குகளும் போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது.நெல் குவிண்டால் ஒன்றுக்கு அரசு நிர்ணயித்த விலை விபரங்கள் கொள்முதல் நிலையங்களே வைக்கப்பட்டுள்ளன.
News March 12, 2026
தொழில் பங்கீட்டாளர் இணையதள போர்டல்

திருநெல்வேலி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு – நிதி தகுதி தளர்வு TANFINET இணையதள போர்டல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார் இன்று தெரிவித்தார். தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் பாரத் நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கி வருகிறது என்றார்.
News March 12, 2026
அரசு மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

திருநெல்வேலி, கண்டியப்பேரி அரசு மருத்துவமனை மேலப்பாளையம் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சுகுமார், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆஸ்பத்திரியில் சுகாதார வசதிகள் குறித்து நோயாளிகளிடம் கேட்டறிந்தார். காலை உணவுத் திட்ட பிரச்னைகள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதில் மருத்துவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.


