News December 14, 2025

புதுவை: மன உளைச்சலில் கொத்தனார் தற்கொலை

image

புதுவை முருங்கம்பாக்கம் கணபதி நகரை சேர்ந்தவர் தண்டபாணி (61). கட்டிட தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். இந்நிலையில் நோய் கொடுமையால் தண்டபாணி கடும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவர், எலி பேஸ்ட்டை உட்கொண்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News December 26, 2025

புதுச்சேரியில் கேரளா மாணவர் கைது!

image

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் சேர்வதற்காக போலி கல்வி சான்றிதழ்களை சமர்ப்பித்ததாக கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் புதுச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பல்கலைக்கழக அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்தபோது அவை உண்மையற்றவை என்பது உறுதியானதாகத் தெரியவந்தது. இதையடுத்து புதுச்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து புதுச்சேரி போலீசார், அந்த மாணவனை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 26, 2025

மூன்று மாநில நிலப்பகுதிகளால் சூழப்பட்ட புதுவை

image

புதுவை என அழைக்கப்படும் புதுச்சேரி, ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படாத புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனம் உள்ளிட்ட நான்கு பகுதிகளை உள்ளடக்கியது. இதில், புதுச்சேரியும், காரைக்காலும் தமிழ்நாடு மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. மாகே கேரளா மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. ஏனம் ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் நிலப்பகுதிகளால் சூழப்பட்டுள்ளது. SHARE IT NOW…

News December 26, 2025

புதுவை: ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மீது லாரி மோதல்

image

காரைக்கால் தலத்தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உத்திராபதி (65). இவர் சம்பவத்தன்று அண்ணா கல்லூரி எதிரே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இதுகுறித்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் ரவி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

error: Content is protected !!