News December 14, 2025
வேலூர்: ரூ.20 லட்சம் மாயம் – விவரம் வெளிவந்தது!

வேலூர், கொணவட்டத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (47) பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 11ம் தேதி இரவு, அலுவலகத்தில் ரூ.20 லட்சம் ரொக்கம் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. மறுநாள் காலை அலுவலகத்தை திறந்து பார்த்த போது, அங்கு வைத்திருந்த 20 லட்சம் காணவில்லையாம். இது தொடர்பாக சுரேஷ் நேற்று (டிச-13) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 11, 2026
வேலூர்: இனி வங்கியில் வரிசை-ல நிக்காதீங்க!

வேலூர் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News March 11, 2026
வேலூர்: VAO லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

நில வரி வசூலிப்பது, பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது, வங்கிகள், கூட்டுறவு சங்கங்களிடமிருந்து பொதுமக்களுக்கு கடன் வாங்கி கொடுப்பது VAO வேலையாகும். இவற்றை முறையாக செய்யவில்லை என்றால், லஞ்சம் கேட்டாலும் (044-22311049) புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
தமிழகக் கல்வித் திட்டம் நிராகரிப்பா? – கதிர் ஆனந்த் கேள்வி

தமிழகத்தில் புதிய தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி & ஆராய்ச்சி மையம் (NITTTR) அமைக்கக் கோரி வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் சுகந்தா மஜும்தார், சென்னையில் ஏற்கனவே மையம் இருப்பதால் புதிய மையம் தேவையில்லை எனத் தெரிவித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்கான இக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.


