News December 14, 2025
பெரம்பலூரில் வாகனங்கள் பொது ஏலம்!

பெரம்பலூர் மாவட்டத்தில், கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 நான்கு சக்கர, 1 மூன்று சக்கர மற்றும் 12 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 15 வாகனங்கள் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில், ஏலம் விடப்பட்டது. மேலும் இந்த பொது ஏலத்தில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி மற்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஏலம் கேட்டனர்.
Similar News
News December 25, 2025
பெரம்பலூர்: நாளை இதனை மறக்காதிங்க

பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை (டிச.26), வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக 2வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது. என மாவட்ட ஆட்சியர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
பெரம்பலூர்: தீயணைப்பு நிலையங்களின் எண்கள்!

தீ விபத்துக்கள் அல்லது ஏதேனும் அவசர காலங்களில், தயக்கமின்றி தீயணைப்புத் துறையின் அவசர எண்ணை அழைக்கலாம். பெரம்பலூர் கோட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் பெரம்பலூர் தீயணைப்பு நிலையங்களின் எண்கள்:
1.பெரம்பலூர் – 04328 224255
2.ஜெயம்கொண்டம் – 04331 250359
3.செந்துரை – 04329 242399
4.துறையூர் – 04327 222401
5.வேப்பூர் – 04328 26640
ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்த அமைச்சர்கள்

கடலூர் மாவட்டம் எழுத்தூர் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் காயமடைந்து பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் C.V.கணேசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் உடனிருந்தனர்.


