News December 14, 2025
புதுவை: போலிச்சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், கேரளாவை சேர்ந்த சித்திக் (21) M.Com படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் அவரின் சான்றிதழை சரிபார்த்த போது, அவை போலி சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக கண்காணிப்பு குழு சிறப்பு அதிகாரி வம்சிதரரெட்டி அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 14, 2025
புதுவையில் காவல் நிலைய கட்டிட திறப்பு விழா

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில், புதிதாக கட்டப்பட்டுள்ள இலாசுப்பேட்டை காவல் நிலைய கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி காவல் நிலைய கட்டிடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் உடன் இருந்தனர்.
News December 14, 2025
புதுச்சேரி: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
News December 14, 2025
புதுச்சேரி: ஆடு வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

புதுவை மாநிலம் காரைக்கால் மாவட்டம் மாதூர் கிராமத்தில், இயங்கி வரும் காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில், எதிர்வரும் டிசம்பர் 17 ஆம் தேதி (புதன்கிழமை) அன்று அறிவியல் முறையில் ஆடு வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் பங்குபெற 7904184739 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


