News December 14, 2025
புதுவை: போலிச்சான்றிதழ் கொடுத்தவர் மீது வழக்கு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில், கேரளாவை சேர்ந்த சித்திக் (21) M.Com படிப்பதற்காக விண்ணப்பித்திருந்தார். இதையடுத்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டாளர் அவரின் சான்றிதழை சரிபார்த்த போது, அவை போலி சான்றிதழ்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து பல்கலைக்கழக கண்காணிப்பு குழு சிறப்பு அதிகாரி வம்சிதரரெட்டி அளித்த புகாரின் பேரில், காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News March 3, 2026
புதுவை: PHONE-ல் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு!

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்புகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) என இந்த வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!
News March 3, 2026
புதுச்சேரி: சிலிண்டர் வாங்கும்போது இது முக்கியம்!

புதுச்சேரி மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!
News March 3, 2026
புதுச்சேரி: ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்

புதுச்சேரி, காரைக்கால், மாஹி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான நியமன உறுப்பினர்களுக்கு ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்களுக்கு ஆணைகளை வழங்கினார். உடன் வேளாண்துறை அமைச்சர் தேனி ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


