News December 14, 2025

கள்ளக்குறிச்சி: சொந்த ஊர் திரும்பியவருக்கு ஏற்பட்ட சோகம்!

image

கள்ளக்குறிச்சி: ரெட்டியார்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (32), சிங்கப்பூரில் டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த வாரம் ஊருக்கு வந்த நிலையில், நேற்று தனது பைக்கில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுள்ளார். அப்போது, சாலையோர எச்சரிக்கை பலகை மீது மோதியதில் படுகாயமடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News December 16, 2025

கள்ளக்குறிச்சி: மன உளைச்சலில் பெண் எடுத்த விபரீத முடிவு

image

தியாகதுருக்கம் அருகே பிரிதிவிமங்கலத்தைச் சேர்ந்த அர்ஜூனனின் மனைவி பிரியா. கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாகவும், பிரியா உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால், பிரியா படுக்கை அறையில் ஊஞ்சல் கயிற்றில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த தியாகதுருகம் போலீசார், பிரியாவின் உடலைக் கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார்.

News December 16, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (டிச.15) இரவு முதல் இன்று (டிச.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

News December 16, 2025

கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (டிச.15) இரவு முதல் இன்று (டிச.16) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!