News December 14, 2025
தருமபுரி: கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

காரிமங்கலம் அருகே கொட்டுமாரன அள்ளி அடுத்த பெரியானஅள்ளி – பாலக்கோடு சாலையில், நேற்று (டிச.13) 2 சக்கர வாகனத்தில் கொட்டுமாரனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கௌதம் (25) என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த கார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கௌதம் உயிரிழந்தார். பின் தகவல் அறிந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி ஜிஹெச்க்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 18, 2025
தர்மபுரி:தமிழ் மொழி குறித்த கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி சட்ட விழா மார்கழி 2 ம் தேதி முதல் 11 தேதி வரை தமிழகம் முழுவதும் தமிழ் மொழி குறித்த கருத்தரங்கு விழிப்புணர்வு பேரணி மூலம் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. இன்று (டிச.18) காலை 11 மணியளவில் தருமபுரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் சதீஷ் தொடக்கி வைத்தார்.
News December 18, 2025
தருமபுரி: பேருந்தில் Luggage-ஐ மறந்தால் இதை செய்யுங்க!

அரசு பேருந்தில் பயணிக்கும் போது உங்க Luggage-ஐ மறந்துவிட்டு இறங்கிவிட்டால் பதட்டப்பட வேண்டாம். 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கு இருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன பொருளை தவறவிட்டீர்கள் என்ற விவரங்களுடன் டிக்கெட்டின் விவரத்தை கூறினால் போதும். அந்த பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து Luggage-ஐ வாங்க வேண்டுமென கூறுவார். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
JUST IN: தொப்பூரில் 2 லாரிகள் மோதி விபத்து!

தொப்பூர் தேசிய நெடுஞ்சாலையில், சூரத்திலிருந்து ஈரோட்டிற்கு லோடு ஏற்றி வந்த கண்டைனர் லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்று கொண்டிருந்த சிமெண்ட் லாரி மீது மோதி, தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நல்வாய்ப்பாக ஓட்டுனர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


