News December 14, 2025

தருமபுரி: கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

image

காரிமங்கலம் அருகே கொட்டுமாரன அள்ளி அடுத்த பெரியானஅள்ளி – பாலக்கோடு சாலையில், நேற்று (டிச.13) 2 சக்கர வாகனத்தில் கொட்டுமாரனஅள்ளி கிராமத்தை சேர்ந்த கௌதம் (25) என்பவர் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரில் வந்த கார் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே கௌதம் உயிரிழந்தார். பின் தகவல் அறிந்த போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்காக தருமபுரி ஜிஹெச்க்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News March 2, 2026

தருமபுரியில் முதல்வர், து.முதல்வர் போட்டியிட மனு

image

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமான பெறப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று(மார்ச் 1) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி தொகுதியில் போட்டியிட வேண்டி விருப்பமானவை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் வழக்கறிஞர் மணி தாக்கல் செய்தார்.

News March 2, 2026

தருமபுரியில் அதிரடி கைது!

image

பாலக்கோடு அடுத்த கடமடை கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார்(26). இவர், நேற்று முன் தினம் மது அருந்திவிட்டு பாலக்கோடி பழைய பைபாஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் சூப்பர் மார்கெட்டில் வேலை செய்யும் பெண்களிடம் தகராறில் ஈடுபட்டு அவர்களை அடித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சுகன்யா(34) என்பவர் பாலக்கோடு போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர்.

News March 2, 2026

தருமபுரியில் துடிதுடித்து பலி!

image

மொரப்பூர் அருகே பாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணையன்(67). இவரது மனைவி ஜீவா(55). இவர்கள் இருவரும் நேற்று(மார்ச் 1) பைக்கில் பாலசமுத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, கண்ணையன் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். ஜீவாவிற்கு தற்போது தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

error: Content is protected !!