News December 14, 2025
ஈரோட்டில் 351 போ் அதிரடி கைது

ஈரோடு மாவட்டத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினா் பயன்பெறும் வகையில் தமிழக அரசு பொதுவிநியோக திட்டத்தின் சாா்பில் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு விநியோகம் செய்யப்படும் ரேஷன் பொருள்களை சிலா் முறைகேடாக கடத்தி கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டி வருகின்றனா்.இதனை தடுக்கும் வகையில் இந்தாண்டு 135டன் அரிசியை கடத்திய 351 பேர் கைது செய்யப்பட்டனர்.
Similar News
News December 25, 2025
ஈரோடு: காவல் இரவு ரோந்து அதிகாரிகள் விபரம்

ஈரோடு மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவும், இரவு நேர குற்றங்களைத் தடுக்கவும், மாவட்டக் காவல்துறை சார்பில் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், கீழ்க்கண்ட உதவி எண்களைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது:100,சைபர் கிரைம் உதவி: 1930, குழந்தைகள் உதவி: 1098
News December 24, 2025
ஈரோடு: வீடு கட்டப்போறீங்களா? IMPORTANT

மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 24, 2025
கோபி: செங்கோட்டையனை எதிரித்து மனு

கோபி சட்டமன்ற தொகுதியில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் செங்கோட்டையன் போட்டியிடுவார் என்ற சூழலில் சமீபத்தில் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவரின் அண்ணன் மகன் கே.கே. செல்வன் அதிமுக சார்பில் கோபி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தற்போது மேலும் கோபியில் போட்டியிட மாநில ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் வி.கே. சி.சிவகுமார் விருப்ப மனுவை வழங்கியுள்ளார்.


