News December 14, 2025
கொடைக்கானல் பஸ் சக்கரத்தில் சிக்கி பலி!

ஈரோடு மூலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த லோகவிக்னேஷ் (26), நேற்று தனது மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்குச் சென்றார். வத்தலக்குண்டு அருகே தனியார் பேருந்தை அவர் முந்திச் செல்ல முயன்றபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 17, 2025
திண்டுக்கல்லில் மோசடியா! இத பண்ணுங்க…

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது போலி விளம்பரங்கள் மற்றும் மோசடி விற்பனையாளர்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிக தள்ளுபடி, குறைந்த விலை காட்டி பணம் பறிக்கும் மோசடிகளை தவிர்க்க, சந்தேகமான இணையதளங்களில் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மோசடி ஏற்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.
News December 17, 2025
திண்டுக்கல்லில் மோசடியா! இத பண்ணுங்க…

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை, இணையத்தில் பொருட்கள் வாங்கும் போது போலி விளம்பரங்கள் மற்றும் மோசடி விற்பனையாளர்களிடம் சிக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அதிக தள்ளுபடி, குறைந்த விலை காட்டி பணம் பறிக்கும் மோசடிகளை தவிர்க்க, சந்தேகமான இணையதளங்களில் வாங்கக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. மோசடி ஏற்பட்டால் 1930 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும், www.cybercrime.gov.in-ல் புகார் செய்யலாம்.
News December 17, 2025
திண்டுக்கல்: சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்

நிலக்கோட்டை அருகே வீலியம்பட்டியை சேர்ந்தவர் அருண்பாண்டி. இவர் 17 வயது சிறுமியை தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி மறுத்ததால் அவர் கழுத்தை துப்பட்டா கொண்டு நெறித்து விட்டு தப்பி சென்று விட்டார். காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிகழ்வு தொடர்பாக வத்தலகுண்டு போலீசார் விசாரணை நடத்தி, அருண்பாண்டியை வலை வீசி தேடி வருகின்றனர்.


